இலங்கையின் சனத்தொகையும் பொருளாதார வளர்ச்சியும் ஒரு நோக்கு (Srilankan Population and Economic Growth-A study)

இலங்கையின் சனத்தொகையும் பொருளாதார வளர்ச்சியும் ஒரு நோக்கு (Srilankan Population and Economic Growth-A study)

இலங்கையானது இந்திய உபகண்டத்தில் இந்துசமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள தீவாகும். இது வட அகலாங்கு 5-10 பாகை வரைக்கும் கிழக்கு நெட்டாங்கு 79-82 பாகை இடையில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 65610 சதுர கிலோமீட்டர் ஆகும். இலங்கையானது அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடாகும். இதன் பொருளாதாரமானது விவசாயம், கைத்தொழில், மீன்பிடி, சுற்றுலா போன்றவற்றில் தங்கியுள்ளது எனலாம்.
இலங்கையின் பிரதான மூலவளமாக சனத்தொகை காணப்படுகின்றது. இச்சனத்தொகை பற்றி அவதானிக்குமிடத்து ஆரம்பகாலங்களில் இருந்து இன்றுவரை அதன் நிலையில் மாறுபட்ட போக்கினை காட்டி நிற்கின்றது. உலக சனத்தொகையில் 0.27% சனத்தொகை வகிபங்கினை இலங்கை காட்டி நிற்கின்றது. உலகளாவிய ரீதியில் 58வது நாடாக இலங்கை விளங்குகின்றது. இங்கு ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 335 பேர் வாழ்கின்றனர். இலங்கையின் இன்றைய சனத்தொகை வளர்ச்சி வீதம் 0.33% ஆகும்.

இலங்கையின் சனத்தொகையினை ஆண்டுகள் ரீதியாக பார்க்குமிடத்து 2010ம் ஆண்டு 20.1 மில்லியன் மக்களும், 2010ம் ஆண்டு 20.1 மில்லியன் மக்களும், 2011ம் ஆண்டு 20.3 மில்லியன் மக்களும், 2012ம் ஆண்டு 20.4 மில்லியன் மக்களும், 2013ம் ஆண்டு 20.5 மில்லியன் மக்களும், 2014ம் ஆண்டு 20.6 மில்லியன் மக்களும், 2015ம் ஆண்டு 20.5 மில்லியன் மக்களும், 2016ம் ஆண்டு 20.1 மில்லியன் மக்களும், 2017ம் ஆண்டு 20.8 மில்லியன் மக்களும், 2018ம் ஆண்டு 20.9 மில்லியன் மக்களும், 2019ம் ஆண்டு 20.99 மில்லியன் மக்களும் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதில் இன்று நகர சனத்தொகை 19.7% ஆகும்.
இச்சனத்தொகை எதிர்காலங்களில் அதிகரிக்கபடலாம் அல்லது மாற்றம் அடையாளம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது. குறிப்பாக 2020ம் ஆண்டு 21.08மில்லியன் ஆகவும், 2025ம் ஆண்டு 21.03மில்லியன் ஆகவும், 2030ம் ஆண்டு 21.4மில்லியன் ஆகவும், 2035ம் ஆண்டு 21.49மில்லியன் ஆகவும், 2040ம் ஆண்டு 21.3மில்லியன் ஆகவும், 2045ம் ஆண்டு 21.1மில்லியன் ஆகவும், 2050ம் ஆண்டு 20.7மில்லியன் ஆகவும், 2080ம் ஆண்டு 17.5மில்லியன் ஆகவும், 2100ம் ஆண்டு 15.03மில்லியன் ஆகவும் மாற்றமடையலாம் என கூறப்படுகின்றது.

இலங்கையின் பிறப்புவீதம் பற்றி அவதானிக்குமிடத்து பிறப்பு வீதம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணமாக இலங்கையின் கல்வியறிவு வீதம் அதிகரித்தமையே ஆகும். 2019ம் ஆண்டுகளில் இலங்கையின் கல்வியறிவு வீதம் 92.6% ஆகும். இதில் இளைஞர்களின் கல்வியறிவு வீதம் 98.36% ஆகும். பிறப்பு வீதம் பற்றி உற்றுநோக்குகையில் 2005ம் ஆண்டு 2.26% ஆகவும், 2010ம் ஆண்டு 2.28% ஆகவும், 2015ம் ஆண்டு 2.11% ஆகவும், 2016ம் ஆண்டு 2.09% ஆகவும், 2017ம் ஆண்டு 2.09% ஆகவும், 2018ம் ஆண்டு 2.09% ஆகவும் காணப்படுகின்றது.
இலங்கையில் இன்று மருத்துவ விருத்தி, சுகாதார விருத்தி போன்றவற்றின் காரணமாக ஆயுட்காலம் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. குறிப்பாக 2018 புள்ளிவிபரத்தின் படி ஆயுள் எதிர்பார்ப்பு காலம் 75.7 ஆண்டுகள் ஆகும். இதில் பெண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு 79.4 ஆகவும் விளங்குகின்றது. அத்துடன் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் 24.9% ஆகவும் 15-64 வயதுக்கு உட்பட்டவர்கள் 67.2% ஆகவும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7.9% ஆகவும் காணப்படுகின்றனர்.

இலங்கையின் மத ரீதியான சனத்தொகையினை அவதானிக்குமிடத்து 2019களில் பௌத்த மதத்தினர் 14618024 (69.3%) ஆகவும், இந்து மதத்தினர் 2868761 (13.6%) ஆகவும், இஸ்லாமிய மதத்தினர் 2067195 (9.8%) ஆகவும் கிறிஸ்தவ மதத்தினர் 1539850 (7.3%) ஆகவும் காணப்படுகின்றனர்.
இலங்கையின் வேலைவாய்ப்பு தொடர்பான விடயங்களினை அவதானிக்குமிடத்து இன்று 4.6% வேலைவாய்ப்பற்று காணப்படுகின்றனர். 2017ம் ஆண்டு தரவுகளின்படி வேலைவாய்ப்பில் உள்ளவர்கள் 8208000 ஆகவும் வேலையற்றவர்கள் 358000 ஆகவும் காணப்படுகின்றனர். துறை ரீதியான வேலைவாய்ப்பில் ஈடுபடுபவர்களினை அவதானிக்குமிடத்து விவசாய துறையில் 24.2% ஆனோரும், கைத்தொழிலில் 27.5% ஆனோரும், சேவைத்தொழிலில் 48.3% ஆனோரும் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருளாதாரமானது அதிகளவில் விவசாய ரீதியானவற்றினை கொண்டுள்ளது. குறிப்பாக நெல்லினை அவதானிக்குமிடத்து 2015ம்ஆண்டு 481900 மெட்ரிக் தொன் உம், 2016ம் ஆண்டு 4220000 மெட்ரிக் தொன் உம் , 2017ம் ஆண்டு 2383000மெட்ரிக் தொன் உம்  காணப்படுகின்றது. தேயிலையினை எடுத்து கொண்டால் 2015ம் ஆண்டு 329 மில்லியன் கிலோகிராம் உம்,  2016ம் ஆண்டு 293 மில்லியன் கிலோகிராம் உம்,  2017ம் ஆண்டு 308 மில்லியன் கிலோகிராம் உம் உற்பத்தி செய்யப்பட்டது. இறப்பரினை எடுத்து கொண்டால் 2015ம் ஆண்டு 89மில்லியன் கிலோகிராம் உம்,  2016ம் ஆண்டு 79மில்லியன் கிலோகிராம் உம்,  2017ம் ஆண்டு 83மில்லியன் கிலோகிராம் உம் உற்பத்தி செய்யப்பட்டது. தெங்கு பயிரினை எடுத்து கொண்டால் 2015ம் ஆண்டு 3050மில்லியன் காய்களும், 2016ம் ஆண்டு 3011 மில்லியன் காய்களும், 2017ம் ஆண்டு 2450மில்லியன் காய்களும் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த 4 வகையான பயிர்களின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானத்தினை அவதானிக்கின்றபோது 2015ம் ஆண்டு 337 பில்லியன் ரூபாய் உம், 2016ம் ஆண்டு 338.7 பில்லியன் ரூபாய் உம்,2017ம் ஆண்டு 422பில்லியன் ரூபாய் உம் கிடைத்தது.

கைத்தொழில் ரீதியாக கிடைத்த வருமானத்தினை அவதானிக்குமிடத்து 2015ம் ஆண்டு 1087.7பில்லியன் ரூபாய் உம், 2016ம் ஆண்டு 1155.7பில்லியன் ரூபாய் உம், 2017ம் ஆண்டு 1302.6பில்லியன் ரூபாய் உம் கிடைக்கப்பெற்றது. இலங்கையின் பொருளாதாரத்தில் விவசாயம், கைத்தொழில், சேவைத்துறை ஆகிய மூன்றும் பங்களிப்பு செய்கின்றது. குறிப்பாக விவசாயமானது 6.8% பங்களிப்பினையும், கைத்தொழில் 26.9% பங்களிப்பினையும் சேவைத்துறை 56.7% பங்களிப்பினையும் செலுத்துகின்றது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை அவதானிக்குமிடத்து 2015ம் ஆண்டு 5% ஆகவும், 2016ம் ஆண்டு 4.8% ஆகவும், 2017ம் ஆண்டு 3.3% ஆகவும் 2018ம் ஆண்டு 4.8% ஆகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர இலங்கையின் பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்யும் துறையாக சுற்றுலா விளங்குகின்றது. யுத்தத்தின் பின்னர் அதிகளவிலான வருமானத்தினை பெற்றுத்தரும் துறையாக இது விளங்குகின்றது. குறிப்பாக 2009ம் ஆண்டு 349.57 மில்லியன் அமெரிக்கடொலரும், 2010ம் ஆண்டு 575.93மில்லியன் அமெரிக்கடொலரும், 2011ம் ஆண்டு 830.29மில்லியன் அமெரிக்கடொலரும், 2012ம் ஆண்டு 1038.74மில்லியன் அமெரிக்கடொலரும், 2013ம் ஆண்டு 1715.47மில்லியன் அமெரிக்கடொலரும், 2014ம் ஆண்டு 2431.1மில்லியன் அமெரிக்கடொலரும், 2015ம் ஆண்டு 2980.65மில்லியன் அமெரிக்கடொலரும்,  2016ம் ஆண்டு 3518.48மில்லியன் அமெரிக்கடொலரும், 2017ம் ஆண்டு 3924.9மில்லியன் அமெரிக்கடொலரும் வருமானமாக கிடைக்கப்பெற்றது.

இந்தியாவின் கோதுமை உற்பத்தி (Wheat Production Of India)

இந்தியாவின் கோதுமை உற்பத்தி (Wheat Production Of India)

உலகளாவிய ரீதியில் முக்கியம் பெற்ற தானியங்களில் ஒன்றாக கோதுமை காணப்படுகின்றது. உலகில் அதிகளவு உற்பத்தியாவதும், நுகர்வதுமான தானிய வகைகளுள் கோதுமை முக்கிய உணவாக உள்ளது. இது ஒரு போக பயிராகவும் பரந்த வேளாண்மையாகவும் விளங்குகின்றது. இன்றைய உலகில் பல்வேறுபட்ட நாடுகள் கோதுமையினை உற்பத்தி செய்கின்றன. இதில் இந்தியா 2019ம் ஆண்டுகளில் தரவுப்படி 2வது பாரிய உற்பத்தி நாடாக விளங்குகின்றது.
இந்தியாவில் கோதுமை அதிகளவு விளையும் மாநிலங்கள்
1)உத்தரபிரதேசம்(96-168 Laks Ha)
2)பஞ்சாப்(35 Laks Ha)
3)மத்திய பிரதேசம்(43Laks Ha)
4)ஹரியானா(35Laks Ha)
5)ராஜஸ்தான்(24 Laks Ha)
6)பீகார்(21 Laks Ha)
7)குஜராத்(12 Laks Ha)
8)மஹாராஷ்ரா(3.7 Laks Ha)
9)உத்தரகாண்ட்(3.7 Laks Ha)
10)மேற்கு வங்காளம்(3 Laks Ha)
இந்தியாவின் கோதுமை வலயங்கள்
1)Nothern hills zone
2)North western plains zone
3)North easterns plains zone
4)Central zone
5)Peninslar zone
6)Southern hill zone
7)National capital region delhi

இந்தியாவினை பொறுத்தவரை கோதுமை உற்பத்தியானது அதிகளவு வருமானத்தினை பெற்றுத்தரும் பயிராக காணப்படுகின்றது. இக்கோதுமை வளர்வதற்கு தேவையான பௌதிக காரணிகளினை அவதானிக்குமிடத்து விதைக்கும்போது வெப்பநிலை 10-15 செல்ஸியஸ் ஆக இருத்தல் வேண்டும். அறுவடையின் போது 21-26 செல்ஸியஸ் வெப்பநிலை தேவைப்படும். மழைவீழ்ச்சியினை பொறுத்தவரை 75-100 சென்றிமீட்டர் தேவை. அத்துடன் மண் வளத்தினை அவதானிக்குமிடத்து செனோசம் மண்ணில் கோதுமை வளர்ச்சி பெறும். இந்தியாவினை பொறுத்தவரை 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கோதுமை கோதுமை பயிரானது பயிரிடப்படுகின்றது. இதனால் 1947ம் ஆண்டு 6.46 மில்லியன் தொன் உற்பத்தி கிடைக்கபெற்றது. 1960ம் ஆண்டுகளில் பசுமை புரட்சியின் விளைவினால் உற்பத்தி திறன் அதிகரித்தது. இதனால் 87 மில்லியன் தொன் உற்பத்தி கிடைக்கப்பெற்றது.

இந்தியாவில் கோதுமையின் வளர்ச்சி பருவம் பற்றி அவதானிக்குமிடத்து கர்நாடகா, மஹாராஷ்ரா, ஆந்திரா, மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் செப்டம்பர்-அக்டோபர் காலப்பகுதிகளிலும், உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அக்டோபர்-நவம்பர் காலப்பகுதிகளிலும், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்முகாஸ்மீர் ஆகிய மாநிலங்களில் நவம்பர்-டிசம்பர் காலப்பகுதிகளிலும் கோதுமை வளர்ச்சி பெறுகின்றது.
அறுவடை பருவத்தினை அவதானிக்குமிடத்து கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஜனவரி-பெப்பிரவரி காலப்பகுதிகளிலும், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மார்ச்-ஏப்ரல் காலப்பகுதிகளிலும், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்முகாஸ்மீர் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல்-மே ஆகிய காலப்பகுதிகளிலும்அறுவடை நடைபெறுகின்றது.

இந்தியாவில் பயிரிடப்படும் கோதுமையையின் வகைகளினை அவதானிக்குமிடத்து தென் மகாராஷ்ரா ,தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் Emmen wheat என்ற கோதுமையும் , பஞ்சாப், கர்நாடகா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் Macroni wheat என்ற கோதுமையும், பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் Common bread wheat என்ற கோதுமையும் , மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் Indian dwarf wheat என்ற கோதுமையும் , ஏனைய இடங்களில் Triticum aestivum என்ற கோதுமையும் பயிரிடப்படுகின்றது.
இந்தியாவில் இன்று பசுமை புரட்சியின் விளைவினால் பரந்துபட்ட காலத்தில் அதிக விளைச்சலை கொண்ட விதையினங்களை அறிமுகத்தில் நாம் காணலாம். குறிப்பாக VL-832, VL-804, HS-240, HS-365, HD-2687, WH147, WH-542, PBW-343, WH-896(D), PDW-233(D), UP-2338, PBW-502, Shresth(HD2687), HW-2044, HW-1085, NP-200, HW-741,Adithiya(HD2781)ஆகிய விதையினங்களினை குறிப்பிட்டு கொள்ளலாம்.

இதுதவிர சிறந்த விளைச்சலுக்காக உரப்பாவனையினை  பயன்படுத்துகின்றனர். குறிப்பாக நைத்திரேஜன் உரத்தினை 1 Ha இற்கு 120kg இனை பயன்படுத்துகின்றனர். பொஸ்பரஸ் உரத்தினை 1 Ha இற்கு 40-60kg இனை பயன்படுத்துகின்றனர்.  பொட்டாசியம் உரத்தினை 1 Ha இற்கு 40kg இனை பயன்படுத்துகின்றனர். P205 உரத்தினை 1 Ha இற்கு 30-40kg இனை பயன்படுத்துகின்றனர். K20 உரத்தினை 1 Ha இற்கு 20-25kg இனை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமில்லாது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய  இயந்திர சாதனங்கள் கோதுமை பயிர்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இன்று  Wheat crop cutter எனும் இயந்திரம் 2018களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்விலை 14999ரூபாய் ஆகும். இது அறுவடையின் போது பயன்படுத்தப்படுகின்றது. மற்றும் கோதுமையின் வளர்ச்சி, அதன் வினைத்திறனை அறிவதற்கு Green seeker என்ற யந்திரத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 40000 ரூபாய் ஆகும்.

இன்று இந்தியாவின் கோதுமை உற்பத்திக்கு நிகராக போட்டி நாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக 2018 தரவுகளின்படி முதலாவது நாடாக சீனாவும்(134340630 தொன்), 2வது நாடாக இந்தியா விளங்குகின்றது. 3வது நாடாக ரஷியாவும் (85863132தொன்), 4வது நாடாக அமெரிக்காவும்(47370880தொன்), 5வது நாடாக பிரான்ஸ் உம் (36924938தொன்), 6வது நாடாக அவுஸ்ரேலியாவும் (31818744தொன்), 7வது நாடாக கனடாவும்(29984200தொன்), 8வது நாடாக பாகிஸ்தானும்(26674000தொன்) காணப்படுகின்றது.

இந்தியாவின் கோதுமை உற்பத்தி நிலைமைகளினை அவதானிக்குமிடத்து 2011ம் ஆண்டு 86874000 மெட்ரிக்தொன் உற்பத்தியும், 2012ம் ஆண்டு 94882000மெட்ரிக்தொன் உற்பத்தியும், 2013ம் ஆண்டு 93506000மெட்ரிக்தொன் உற்பத்தியும், 2014ம் ஆண்டு 95850000மெட்ரிக்தொன் உற்பத்தியும், 2015ம் ஆண்டு 86530000மெட்ரிக்தொன் உற்பத்தியும், 2016ம் ஆண்டு 87000000மெட்ரிக்தொன் உற்பத்தியும், 2017ம் ஆண்டு 98510000மெட்ரிக்தொன் உற்பத்தியும், 2018ம் ஆண்டு 99700000மெட்ரிக்தொன் உற்பத்தியும் கிடைக்கபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் நெல் உற்பத்தி (Paddy Production Of Srilanka)

இலங்கையின் நெல் உற்பத்தி (Paddy Production Of Srilanka)
இலங்கையானது வளர்ந்து வருகின்ற தன்னிறைவு பொருளாதாரத்தினை கொண்டுள்ள விவசாய நாடாகும். இங்கு நெல் உற்பத்தியானது பண்டைய காலந்தொட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் சுயதேவைக்காக உற்பத்தி செய்யபட்ட நெல்லானது இன்று வர்த்தக நோக்கத்துக்காகவும் உற்பத்தி செய்யப்படுகின்றது. இலங்கை மக்களின் பிரதான உணவாக நெல்லரிசி சோறு காணப்படுகின்றது. இலங்கையில் நெல் உற்பத்தியானது தனது நிலையில் 63% வளர்ச்சியினை பெற்றுள்ளது. இங்கு சிறுபோகம், பெரும்போகம் ஆகிய முறைகளில் நெல் பயிரிடப்படுகின்றது. 2018களில் 2.21 மில்லியன் மெட்ரிக் தொன் நெல்லானது களஞ்சியப்படுத்தபட்டதுடன் 1.51 மில்லியன் மெட்ரிக் தொன் நெல்லானது நுகர்வுக்காக பயன்படுத்தப்பட்டது.
இலங்கையில் நெல் உற்பத்தி மாவட்டங்கள் 
இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் நெற்பயிரினை உற்பத்தி செய்கின்றனர். இதில் குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, குருநாகல், திருகோணமலை, அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் அதிக விளைச்சல் காணப்படுகின்றது.
இலங்கையில் 643161 ஹெக்டேயர் பரப்பில் நெல் பயிரிடப்படுகின்றது. இதில் கம்பஹா, குருநாகல், பொலநறுவை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் 12112 ஹெக்டேயர் பரப்பில் உற்பத்தி நடைபெறுகின்றது. இலங்கையில் பொருளாதார வளர்ச்சியில் 31.8% பங்களிப்பினை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நெல் பயிரினை மேற்கொள்வதற்கான சாதக காரணிகளினை பார்க்குமிடத்து வருடாந்த மழைவீழ்ச்சி 1900-2000 மில்லிமீட்டர் ஆக இருத்தல் வேண்டும். வருடாந்த சராசரி வெப்பநிலை 21-32 செல்ஸியஸ் ஆக இருத்தல் வேண்டும். மலைநாட்டு பகுதியில் படிக்கட்டு முறையிலும் ஏனைய பகுதிகளில் சமதரையிலும் மேற்கொள்ளப்டுகின்றது. நெல் பயிரினை மேற்கொள்ள வண்டல்மண் துணை புரிகின்றது. இலங்கையில் தாழ்நாடு உலர்வலயத்திலும் (1700-3200மில்லிமீட்டர்), மலைநாட்டு ஈரவலயத்திலும் (1400-3300மில்லிமீட்டர்), தாழ்நாட்டு இடை வலயத்திலும்(1100-1600மில்லிமீட்டர்), மலைநாட்டுஇடை வலயத்திலும் (1400-1600மில்லிமீட்டர்) நெல் பயிரிடப்படுகின்றது.
இலங்கையில் பயிரிடப்படும் அரிசி வகைகளினை அவதானிக்குமிடத்து பண்டைய காலங்களில் காணப்படுகின்ற அரிசியும் இன்று புதிதாக பலவகையான அரிசி வகைகளையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பச்சைப்பெருமாள், கழுகெனதி, கீரிசம்பா, மடதவலு, நாட்டுஅரிசி, குருளுதுண்ட, கொணபரு, சம்பா, இலங்கை சிவப்பரிசி, இலங்கை வெள்ளையரிசி, சுப்பிரி நாடு, சுப்பிரி சம்பா, சுவண்டேல் ஆகிய வகை அரிசிகள் காணப்படுகின்றன. சம்பா அரிசியின் விலை டிசம்பர் 29களில் இருந்து 104-63 ரூபாய் ஆகவும், வெள்ளை கெக்குலு அரிசி 75.40 ரூபாய் ஆகவும், சிவப்பு நாடு அரிசி 77 ரூபாய் ஆகவும் நாட்டரிசி 96 ரூபாய் ஆகவும் காணப்படுகின்றது.
இலங்கையில் நெல் உற்பத்தியில் நவீன விதையினங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை குறுகிய காலத்தில் விளைச்சலினை பெற்றுத்தருபவையாக காணப்படுகின்றன. குறிப்பாக 5 மாத கால விதையினங்களாக H9, Bg3-5, Bg 407, Bg 38, Bg745 ஆகியன காணப்படுகின்றன. 4 மாத கால விதையினங்களாக H4, H8, Bw-78, Bg11-11, Bg90-2, Bw100, Bg400-1, Bg379-2, Bg380, Bg450 ஆகியன காணப்படுகின்றன.  3அரை மாதகால விதையினங்களாக H7, Bg34-6, Bg94-1, Bg360, Bg358, Bw266-7 ஆகியன காணப்படுகின்றன.    3 மாத கால விதையினங்களாக H10, 62-355, Bg34-8, Bg 276-5, Bg300, Bg301, Bw272-6B ஆகியன காணப்படுகின்றன.   2 அரை மாத கால விதையினங்களாக Bg750 காணப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக 134 வகையிலான விதையஇனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இதுதவிர உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு இரசாயன உரப்பாவனை பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்களாக நைத்திரிஜன், பொட்டாசியம், பொஸ்பரஸ், காம்பவுண்ட், ரவுண்டப், மக்னீசியம் ஆகியன காணப்படுகின்றன. இதுமட்டுமில்லாது இலங்கையில் நெல்லினை களஞ்சியப்படுத்தவும் அதில் ஆராய்ச்சிகளினை மேற்கொள்ளவும் மகாஇலுப்பகம, ஹிங்குராங்கொட ஆகிய இடங்கள்  விளங்கி வருகின்றது.
இலங்கையில் இன்றைய நெல் உற்பத்தி நிலைமைகளினை அவதானிக்குமிடத்து 2018களில் மகாபோகம் 56000 ஹெக்டேயர் பரப்பிலும் யால போகத்தில் 31000 ஹெக்டேயர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக 87000 ஹெக்டேயர் பரப்பில் நெல் உற்பத்தி நடைபெறுகின்றது.
இலங்கையில் 2013/2014 ஆண்டுகளில் 2235000மெட்ரிக்தொன் உற்பத்தியும் , 2014/2015 ஆண்டுகளில் 2877000மெட்ரிக்தொன் உற்பத்தியும், 2015/2016 ஆண்டுகளில் 2903000மெட்ரிக்தொன் உற்பத்தியும் , 2016/2017ஆண்டுகளில் 1474000மெட்ரிக்தொன் உற்பத்தியும் , 2017/2018 ஆண்டுகளில் 2397000மெட்ரிக்தொன் உற்பத்தியும் மேற்கொள்ளப்பட்டது.  2017/2018களில் அதிக  நெல் விளைச்சல் மாவட்டங்களாக  அம்பாறை(332767MT), பொலநறுவை(277349MT), குருநாகல்(187951MT), மட்டக்களப்பு(177289MT), அம்பாந்தோட்டை(174989MT), அனுராதபுரம்(169316MT), திருகோணமலை(144171MT), யாழ்ப்பாணம்(16345MT),  கிளிநொச்சி(91484MT) உற்பத்தியும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் இன்று இலங்கையின் நெல் உற்பத்தியில் நவீன போக்குகளாக இயந்திர சாதனங்களின் பயன்பாடுகள், விவசாயிகளுக்கான கடன்வசதிகள், மானிய முறை செயற்திட்டங்கள், நீர்பாசன திட்டங்களின் அறிமுகம், அரசாங்கத்தின் உதவிகள் போன்றன சிறப்பாக அமையப்பெற்றுள்ளன.

வளர்முக நாடுகளின் சனத்தொகை (Population Of Least Developing Countries)

வளர்முக நாடுகளின் சனத்தொகை(Population Of Least Developing Countries)

இன்றைய உலகில் சனத்தொகை அதிகரிப்பானது மிக வேகமாக வளர்ந்த்து கொண்டே செல்கின்றது. குறிப்பாக வளர்முக நாடுகளில் இன்று அதிகளவிலான மக்கள் தொகை காணப்படுகின்றது. வளர்முக நாடுகளினை பொறுத்தவரை வறுமைநிலை, வளர்முக நாடுகள் விவசாய நாடுகளாக காணப்படல், மூட நம்பிக்கைகள், இளவயது திருமணம், கலாசார முறைகள், குடும்ப கட்டுப்பாடுகள் இன்மை போறவற்றினால் சனத்தொகை அதிகரிக்கின்றது. இவ் சனத்தொகை அதிகரிப்பினால் தான் இன்று வரையிலும் இந்தநாடுகள் அபிவிருத்தி என்ற நிலையினை எட்டவில்லை என்றே கூறமுடியும். சனத்தொகை வளர்ச்சி வீதம் பற்றி அவதானிக்குமிடத்து சீனாவில் 0.35% ஆகவும், இந்தியாவில் 1.08% ஆகவும், பாகிஸ்தானில் 1.88% ஆகவும் , பங்களாதேஷில் 1.02% ஆகவும், நைஜீரியாவில் 2.60% ஆகவும் , எகிப்தில் 1.80% ஆகவும், தன்சானியாவில் 3.08% ஆகவும் காணப்படுகின்றது.
வளர்முக நாடுகளின் சனத்தொகை (2019)
1) சீனா- 1.42 பில்லியன் 
2) இந்தியா- 1.36 பில்லியன் 
3) பாகிஸ்தான்- 204 மில்லியன் 
4) நைஜீரியா – 200 மில்லியன்
5) பங்களாதேஷ்- 168 மில்லியன்
6) எத்தியோப்பியா- 110 மில்லியன்
7) எகிப்து- 101 மில்லியன்
8) வியட்நாம் – 97 மில்லியன்
9)கொங்கோ- 86 மில்லியன்
10) துருக்கி- 82 மில்லியன்
11) ஈரான்- 82.8 மில்லியன்
12) கென்யா- 52.2 மில்லியன்
13)கொலம்பியா- 49.8 மில்லியன்
14) உகாண்டா- 45.7 மில்லியன்
15) இலங்கை- 21.01 மில்லியன்
வளர்முக நாடுகளில் சனத்தொகை அதிகரிப்பினால் ஏற்படும் விளைவுகள் 

1)மக்களிற்கான வதிவிட பற்றாக்குறை 
வளர்முக நாடுகளில் சனத்தொகை அதிகரிப்பினால் அவர்களுக்கான இருப்பிடங்கள் குறைவாகவும் மக்கள் ஒரு பிரதேசத்தில் நெருக்கடியாக வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக சீனாவில் ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பில் 146 பேரும், இந்தியாவில் 416 பேரும்,  பாகிஸ்தானில் 232 பேரும், பங்களாதேஷில் 1139 பேரும், நைஜீரியாவில் 218 பேரும், இலங்கையில் 320 பேரும் வாழ்கின்றனர். இதனால் எதிர்காலங்களில் சரி இன்றைய காலத்திலும் சரி மக்களிற்கான வதிவிட பற்றாக்குறை ஏற்படுகின்றது.
2)காடழிப்பு 
அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப குடியிருப்புகளினை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் அதிகளவிலான காடுகள் அழிக்கப்படுகின்றன. இக்காடு அழிப்பினால் புவி வெப்பமடைதல் பிரச்னை தோன்றுகின்றது. குறிப்பாக இந்தியாவில் 1900-2000 ஆண்டுகள் வரை 677701000ன் ஹெக்டேயர் காடுகள் அழிக்கப்படத்துடன் வருடாந்தம் 361500 ஹெக்டேயர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது. மற்றும் கொங்கோவில் வருடாந்தம் 500 கிலோமீட்டர் பரப்பு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது.
3)வேலையில்லா பிரச்னை ஏற்படுதல் 
அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப ஒரு நாட்டிலே அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் அதிகளவிலான கல்வி கற்ற மக்களும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் 2017ம் ஆண்டு 18.3 மில்லியன் மக்களும், 2018ம் ஆண்டு 18.6 மில்லியன் மக்களும், 2019ம் ஆண்டு 18.9 மில்லியன் மக்களும் வேலையில்லாமல் அவதிப்படுகின்றனர். இவ் வேலையில்லா பிரச்னை இலங்கையில் 4.50% ஆகவும், தென் ஆபிரிக்காவில் 27.70% ஆகவும், சூடானில் 20.30% ஆகவும் காணப்படுகின்றது.
4)சேரிகள் உருவாகின்றது.
வளர்முக நாடுகளில் அதிகரித்து வரும் சனத்தொகையினால் மக்கள் வாழ்வதற்கு போதிய இடம் இல்லாததனால் அதிகளவிலான சேரிப்புறங்கள் உருவாகின்றன. குறிப்பாக இந்தியாவில் மும்பை(Dharavi slum), டெல்லி (Bhalswa slum) சென்னை(Nochchikuppam), கல்கத்தா(Basanti slum), பங்களூர்(Rajenthira nagar slum)  ஆகியன சேரிகளாக காணப்படுகின்றன. பாகிஸ்தானில் Orangi town, Karaichi, Lyari town ஆகியன சேரிகளாக காணப்படுகின்றது. இலங்கையில் மாளிகாவத்தை, தெஹிவளை, உசவி வத்த போன்ற இடங்களினை கூறிக்கொள்ளலாம்.
5)வறுமை நிலை உண்டாகும் 
அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப மக்களிற்கு போதுமான வேலைவாய்ப்பு இல்லாமல் போகின்றது. அத்துடன் மக்கள் தமது தேவைகளையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகின்றது. இதனால் வறுமை நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக ஆசியாவில் 135.8 மில்லியன் மக்களும், ஆபிரிக்காவில் 422.2 மில்லியன் மக்களும், தென் அமெரிக்காவில் 17 மில்லியன் மக்களும் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல் இந்தியாவில் 640 மாவட்டங்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6)உணவு நெருக்கடி ஏற்படுகின்றது 
வளர்முக நாடுகளினை பொறுத்தவரை சனத்தொகை அதிகரிப்பினால் மக்களிற்கு போதுமான அளவு உணவு கிடைக்க பெறாத நிலை ஏற்படுகின்றது. அத்துடன் விவசாய நிலங்களும் துண்டாடப்படுகின்றது. இதனால் பஞ்சம், பசி, பட்டினி போன்றன ஏற்படுகின்றன. குறிப்பாக எத்தியோப்பியாவில் 8 மில்லியன் மக்களும், எதித்திரியாவில் 1.3 மில்லியன் மக்களும்,  சோமாலியாவில் 1 மில்லியன் மக்களும்,  ஆப்கானிஸ்தானில் 2.5 மில்லியன் மக்களும், இந்தியாவில் 130 மில்லியன் மக்களும், உகாண்டாவில் 5500000 மக்களும் உணவு பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7)நீர்பற்றாக்குறை ஏற்படுதல் 
அதிகரித்து வரும் சனத்தொகையினால் மக்கள் அருந்துவதற்கு போதுமான நீர் கிடைக்காமல் போகின்றது. அத்துடன் சில நாட்டு மக்கள் அசுத்தமான நீரினை பருகுகின்ற நிலை உருவாகின்றது. குறிப்பாக சீனாவில் வட சான்ஷி மாகாணத்தில் 3 மில்லியன் மக்களும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா பகுதிகளில் 130 மில்லியன் மக்களும் நீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2030களில் ஆபிரிக்காவில் 75-250 மில்லியன் மக்கள் நீர்பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்வு கூறப்படுகின்றது.

8)தொற்றுநோய்கள் ஏற்படும் (டயறியா, வாந்திபேதி, யானைக்கால் நோய்)
9)திண்மக்கழிவு அகற்றுதல் தொடர்பான பிரச்சனை தோன்றுதல்.
10)அரசியல் குளறுபடிகள் ஏற்படுதல்.

உலக சனத்தொகை (World Population)

உலக சனத்தொகை (World Population)
உலகமானது மக்களின் தொகையினாலும் அவர்களின் செயற்பாடுகளின் காரணமாகவும் இயங்குகின்றது. மக்கள் இல்லையெனில் இன்று உலகம் இல்லை என்றே தான் கூறமுடியும். அதாவது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் மக்கள் தொகை திரண்டிருக்கும் பாங்கினை சனத்தொகை என்பார்கள். இன்று 2019ம் ஆண்டில் உலகின் சனத்தொகை 7.6 பில்லியன் ஆகும். இது 2020களில் 7.7 பில்லியன் ஆகவும், 2025களில் 8.1பில்லியன் ஆகவும் , 2030களில் 8.5 பில்லியன் ஆகவும் , 2035களில் 8.8பில்லியன் ஆகவும், 2040களில் 9.2பில்லியன் ஆகவும் , 2045களில் 9.5பில்லியன் ஆகவும் , 2050களில் 9.7 பில்லியன் ஆகவும் சனத்தொகை அதிகரிக்கும் என UNITED NATION கூறுகின்றது. இன்றைய உலகின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 2016களில் 1.14% ஆகவும், 2017களில் 1.12% ஆகவும், 2018களில் 1.07%ஆகவும் காணப்படுகின்றது.
இவ் சனத்தொகையினை கண்டங்கள் ரீதியாக அவதானிக்குமிடத்து ஆசியாவில் 4.58 பில்லியன் ஆகவும், ஆபிரிக்காவில் 1.32 பில்லியன் ஆகவும், ஐரோப்பாவில் 743மில்லியன் ஆகவும், இலத்தீன் அமெரிக்காவில் 658 மில்லியன் ஆகவும், வட அமெரிக்காவில் 366 மில்லியன் ஆகவும் , அவுஸ்ரேலியா மற்றும் ஓசானியாவில் 41 மில்லியன் ஆகவும் காணப்படுகின்றது.
உலகில் சனத்தொகை கூடிய நாடுகள் (2019)
1-சீனா (1.4பில்லியன்)
2- இந்தியா (1.36 பில்லியன்)
3- அமெரிக்கா (328 மில்லியன்)
4- இந்தோனேசியா (268 மில்லியன்)
5- பிரேசில் (211 மில்லியன்)
6- பாகிஸ்தான் (202 மில்லியன்)
7- நைஜீரியா (198 மில்லியன்)
8- பங்களாதேஷ் (167 மில்லியன்)
9- ரஷியா (143 மில்லியன்)
10- மெக்சிகோ (131 மில்லியன்)
உலகின் சனத்தொகை கூடிய நகரங்கள் (2019)
1- டோக்கியோ (37.4 மில்லியன்)
2- டெல்லி (28.5 மில்லியன்)
3- ஷாங்காய் (25.5 மில்லியன்)
4- சாயப்பொலோ (21.6 மில்லியன்)
5- மெஸ்சிக்கோ (21.5 மில்லியன்)
6- கெய்ரோ (20 மில்லியன்)
7- மும்பாய் (19.9 மில்லியன்)
8- பீஜிங் (19.6 மில்லியன்)
9- டாக்கா (19.5 மில்லியன்)
10- ஒசாக்கா (19.2 மில்லியன்)
உலகின் சனத்தொகையினை பின்வரும் அடிப்படையில் பாகுபடுத்தலாம் 
1)அதிகூடிய சனத்தொகை கொண்ட பகுதி- தென்னாசியா, கிழக்காசியா, தென் கிழக்காசியா, மேற்கு ஐரோப்பா 
2)நடுத்தரவு அளவு கொண்ட பகுதிகள் – அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியாவின் மேற்கு கரை, ஐரோப்பாவின் வடக்கு கரை, கிழக்கு ஆப்பிரிக்கா, தென் கிழக்கு ஆபிரிக்கா 
3)குறைந்த சனத்தொகை கொண்ட பகுதிகள்
   அதிக வெப்ப பிரதேசங்கள்( ஒரிஸா, சகாரா, அட்டகாமா, பற்றகோனியா, கோபி)
அதிக குளிர் பிரதேசம் (கிரீன்லாந்து, வடதுருவம், தென்துருவம்)
உயர்நில பகுதிகள் (இமயமலை, றொக்கி, அந்தீஸ், கிளிமஞ்சாரோ)
உலக சனத்தொகை பரம்பலில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் 

1)காலநிலை தன்மைகள் 
ஒரு பிரதேசத்தில் மக்கள் வாழ வேண்டுமெனில் சிறப்பான காலநிலை என்பது அவசியமாகின்றது. குறிப்பாக அதிக குளிர், அதிக வெப்பநிலை உள்ள பிரதேசத்தில் மக்கள் வசிக்க முடியாது. உலகினை பொறுத்தவரை அயனவலயம், இடை வெப்ப வலய பகுதிகளில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ப சாதகமான காலநிலை தன்மைகள் கிடைக்கப்பெறுகின்றது.  இதனால் இவ் வலயங்களில் அதிகளவிலான மக்கள் வாழ்கின்றனர்.
2)சிறப்பான தரைத்தோற்றம் 
மக்கள் வாழ்வதற்கும் தமது குடியிருப்புகளினை அமைத்து கொள்வதற்கும் தரைத்தோற்றம் நன்கு திறம்பட அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக மலைப்பகுதிகள், சாய்வான தளங்கள் மனிதன் வாழ்வதற்கு பொருத்தமானதல்ல. மாறாக சமதரை கொண்ட நிலப்பகுதிகளில் அதிகளவிலான மக்கள் வாழ்கின்றனர். ஜப்பானின் டோக்கியோ, சீனாவின் பீஜிங், இந்தியாவின் டெல்லி, அமெரிக்காவின் வொசிங்டன் போன்றனவற்றினை கூறிக்கொள்ளலாம்.
3)இயற்கை அனர்த்தங்கள் அற்ற பகுதி 
சனத்தொகை வாழ்வதற்கு சிறப்பான சூழல் அவசியமாகின்றது. குறிப்பாக இயற்கை அனர்தங்களான புவிநடுக்கம், எரிமலை செயற்பாடுகள், கரையோர பகுதிகள் போன்றன உள்ளடங்கலான வலயங்களில் மக்கள் குடியிருப்புக்கள் அதிகளவில் காணப்பட மாட்டாது. மாறாக இயற்கை அனர்த்தங்களின் அளவு குறைவான பகுதிகளில் அதிகளவிலான மக்கள் வாழ்கின்றநிலை காணப்படுகின்றது.
4)நகராக்கம் நிறைந்த பகுதிகள்
இன்றைய உலகினை பொறுத்தவரையிலும் நகரப்பகுதிகளில் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவதனால் அதிகளவானோர் அங்கே வாழ்கின்றனர். 2018களில் 53.5% ஆனார் நகரப்பகுதிகளில் வாழ்வதாக தரவுகள் கூறுகின்றது. இது 2050களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2019ம் ஆண்டு தரவுகளின்படி உலகின் சிறந்த நகராக்கம் காணப்படும் இடங்களாக கொங்கொங், சிங்கப்பூர், பெர்முடா, மாகோ, கெய்மன் தீவுகள், சென் மார்ட்டின், மொராக்கோ, குவாட்டர், குவைத், பெல்ஜியம், மால்ட்டா, வேர்ஜினியான் தீவுகள், உருகுவே, சான்மரீனோ ஆகியவற்றினை கூறலாம்.
5)சிறந்த பொருளாதார விருத்தி 
ஒரு நாட்டில் மனிதன் தன்னிறைவாக வாழ்வதற்கு பொருளாதாரம் முக்கியமானதாகும். எப்பகுதியில் சிறப்பான பொருளாதாரம் காணப்படுகின்றதோ அந்தப்பகுதியில் அதிகளவிலான மக்கள் குடியேறுவார்கள். குறிப்பாக 2018களில் சிறந்த பொருளாதார நாடுகளாக அமெரிக்கா(19.4 trillion அமெரிக்க டொலர்), சீனா(14 trillion அமெரிக்க டொலர்), ஜப்பான் (5.1 trillion அமெரிக்க டொலர்), ஜெர்மனி (4.2 trillion அமெரிக்க டொலர்), ஐக்கிய ராச்சியம்(2.94 trillion அமெரிக்க டொலர்), பிரான்ஸ்(2.93 trillion அமெரிக்க டொலர்), இந்தியா(2.85 trillion அமெரிக்க டொலர்), இத்தாலி (2.18 trillion அமெரிக்க டொலர்), பிரேசில்(2.14 trillion அமெரிக்க டொலர்), கனடா(1.8 trillion அமெரிக்க டொலர்) ஆகியன காணப்படுகின்றன.
6)சிறப்பான கல்வி செயற்பாடுகள் 
ஒரு நாட்டின் அதிகளவு சனத்தொகை பரம்பல் இருக்க வேண்டுமாயின் அவ் நாட்டில் சிறப்பான கல்வி செயற்பாடுகளும் இருத்தல் வேண்டும். அதாவது வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் இடம்பெயர்ந்து கல்விற்காக வாழ்கின்றநிலை கணணப்படுகின்றது. இன்று உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. குறிப்பாக Oxford university, Cambridge university, ST. Alford university போறவற்றினை கூறிக்கொள்ளலாம். இப்பல்கலைக்கழகங்களில் 2000-18000 மாணவர்கள் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.
7)சிறந்த சுகாதார வசதிகள் 
உலகில் மக்கள் சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழவேண்டுமாயின் சிறந்த சுகாதார வசதிகள் அவசியமாகின்றது. ஒரு குழந்தை பிறப்பு முதல் கொண்டு அனைத்து விடயத்திற்கு சுகாதார வசதி, மருத்துவம் முக்கியம் தேவை. இவ் சுகாதார வசதி சிறப்பாக அமையும் பட்ஷத்தில் அப்பகுதியில் அதிகளவிலான மக்கள் ஒருங்குவார்கள். குறிப்பாக 2018 தரவுகளின் படி சிறந்த சுகாதாரமும் ஆரோக்கிய பழக்கமும் கொண்ட நாடுகளாக இத்தாலி, ஐஸ்லாந்து, சுவிஸ், சிங்கப்பூர், அவுஸ்ரேலியா, ஸ்பெயின், ஜப்பான், சுவீடன், இஸ்ரேல், லக்ஸம்பேர்க், நோர்வே ஆகியன காணப்படுகின்றன.
8)சிறந்த தொழில்நுட்ப வசதிகள் 
இன்றைய உலகமானது தொழில்நுட்பத்துடன் இணைந்தே காணப்படுகின்றது. அதிகரிக்கும் மக்கள் தொகையானது சிறந்த தொழில்நுட்பத்துடனும் அதன் பாதையிலும் செல்கின்றது. இதனால் அதிக மக்கள் இவ்பகுதிகளில் ஒருங்குகின்றனர். 2018ம் ஆண்டு தரவுகளின்படி தென்கொரியா(ICT Index 8.93), டென்மார்க் ((ICT Index 8.88), ஐஸ்லாந்து ((ICT Index 8.86), ஐக்கிய ராச்சியம்((ICT Index 8.75), சுவீடன்((ICT Index 8.67), ஜப்பான்((ICT Index 8.47), சிங்கப்பூர்((ICT Index 8.08) ஆகிய நாடுகள் சிறந்த தொழில்நுட்பத்தினை கொண்டு காணப்படுகின்றன.
9)போக்குவரத்து வசதிகள் 
10)சுமூகமான அரசியல் நிலைமைகள் 

அமேசன் மழைக்காடுகள் (The Lungs Of The Earth)

அமேசன் மழைக்காடுகள் (The Lungs Of The Earth)


உலகிலே முக்கியமான அயனமழை காடுகளில் முதலிடத்தில் இருக்கும் காட்டுத்தொகுதியாக அமேசன் காடுகள் விளங்குகின்றன. இது தென்னமெரிக்காவில் காணப்படுகின்றது. உலகில் உள்ள அரைவாசி கடுகளினை இக்காடுகள் பிரதிபலித்து நிற்கின்றன. அத்துடன் அதிக உயிர்பல்வகைமையினை உள்ளடக்கிய காட்டு தொகுதியாக விளங்குகின்றது. அமேசான் என்னும் சொல் கிரேக்க மொழி சொல்லாகும். இதன் பொருள் “A Race of women Warriors” ஆகும். இக்காடுகள் உலகிற்கு 20% ஆன ஓட்ஸிசனை வழங்குவதனால் “உலகின் நுரையீரல்” என வர்ணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமேசன் காடுகள் அதிகளவில் 60% இனை பிரேசில் நாட்டிலும், பெருவில் 13% இனையும், கொலம்பியாவில் 10% இனையும் ஏனைய நாடுகளான பொலிவியா, கயானா, ஈகுவடார் ஆகியவற்றினையும் உள்ளடக்கி காணப்படுகின்றது. இக்காடுகள் 5500000 சதுர கிலோமீட்டர் பரப்பளவினை கொண்டுள்ளது. இக்காடுகளில் தான் உலகில் 2வது நீளமான நதியான அமேசான் நதி பரந்துள்ளது. இது 3903-4195 மைல் நீளத்தினை கொண்டுள்ளதோடு 20% நன்நீரினை தன்னகத்தே கொண்டுள்ளது. இக்காடுகளின் எல்லையினை அவதானிக்குமிடத்து வடக்கே கயானா உயர்நிலத்தினையும், கிழக்கே அத்திலாந்திக் சமுத்திரத்தினையும், தெற்கே பிரேசில் மத்திய நிலத்தினையும் , மேற்கே அந்தீஸ் மலைத்தொடரினையும் கொண்டுள்ளது.

இக்காடுகளின் காலநிலையினை பற்றி அவதானிக்குமிடத்து 22-27 செல்ஸியஸ் வெப்பநிலையினை கொண்டுள்ளது. இங்கு ஏப்ரல்- செப்டம்பர் வரை அதிக வெப்பநிலை நிலவும். மழைவீழ்ச்சியினை பொறுத்தவரை 1524-4572 மில்லிமீட்டர் மழையினை வருடாந்த மழைவீழ்ச்சியினை கொண்டுள்ளது. இங்கு டிசம்பர்-மார்ச் வரை அதிகளவு மழை பொழியும் பருவமாக காணப்படுகின்றது. இங்குள்ள அமேசான் நதியானது 55 மில்லியன் கலன் நீரினை அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமேசான் காடுகளில் உள்ள உயிர்பல்வகைமையினை பற்றி அவதானிக்குமிடத்து 2.5 மில்லியன் பூச்சி வகைகளினையும், 40000 தாவரவகைகளினையும், 16000 மரவகைகளினையும், 1300 பறவையினங்களையும், 5600 மீனினங்களையும், 427 முலையூட்டி வகையினங்களையும், 400 ஈரூடக வாழிகளினையும், 378 ஊர்வன வகைகளையினையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் பிரேசில் நாட்டில் மாத்திரம் 96660-128843 உயிர்பல்வகைமைகள் நிறைந்துள்ளன. இக்காடுகளில் 390 பில்லியன் அளவுள்ள மரங்கள் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

இக்காடுகளில் முக்கிய மரங்களாக Myrtle, Laurel, Palm, Acacia, Rose wood, Bromeliad, Brazil wood, Rubber, Orchid, Kapok tree, Water Lilly, Helicon ஆகியன காணப்படுகின்றது. முக்கிய விலங்கினங்களாக Jaguar, Manatee, Tapir, Red deer, Caph bara ஆகிய விளங்குகின்றன. ஆபத்தான உயிரினங்களாக Poison dart frog, Lance head pit, Viper, Jaguar, Bull shark, Harpy eagle, Amazon giant centipede, Bullet ant, Tree boa, Vampire bot, Black caiman, Green anaconda, Electric eel, Red bellied piranha, Assassin buy, Brazilian wandering spider ஆகியன காணப்படுகின்றன.

இக்காடுகளின் பொருளாதார நடவடிக்கைகளினை பற்றி அவதானிக்குமிடத்து தென்னமெரிக்காவின் 70% ஆன பொருளாதாரமானது இக்காடுகளில் தங்கியுள்ளது. இக்காடுகளினை ஆதாரமாக கொண்டு சொக்கொலேட், மிளகு, அன்னாசி, வாழைப்பழம், தக்காளிப்பழம், நெல் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் 3000 பழமரங்கள் காணப்படுகின்றன. இதில் 200 பலவகைகள் மேற்கு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
அமேசான் காடுகளில் சுதேசிய இனங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இற்றைக்கு 32000-39000 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுசிறு குடியிருப்புகளினை அமைத்து கொண்டு இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இக்காடுகளில் 12.5% ஆன சுதேசிய இனங்கள் வாழ்கின்றனர். செவ்விந்தியர்கள் 450000 பேரும், இக்காட்டுக்கே உரிய 450 இனங்களும் பிரேசிலில் வாழ்கின்றனர். இவ் இனங்களில் Yanomami, Yagua, Huaorani, Riberenos ஆகியன முக்கியம் வாய்ந்த இனங்களாகும்.

Yanomami என்ற  இனத்தவர்கள் பிரேசில், வெனிசுவேலா ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். குறிப்பாக 9.4 மில்லியன் ஹெக்கடேயர் பரப்பில் இவர்களின் வசிப்பிடம் உள்ளது. Yagua என்ற இனத்தவர்கள் பெரு, கொலம்பியாவிலும்,  Huaorani என்ற இனத்தவர்கள் ஈகுவாடரிலும் வாழ்கின்றனர். இதுதவிர Guarani என்ற இனத்தவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்னரில் இருந்து வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 51000 ஆகும். இவர்கள் சோளம், சோயா, கரும்பு உற்பத்தியினை மேற்கொண்டு வருகின்றனர். மற்றும் Tikuna என்ற இனத்தவர்கள் 40000 பேரும் Akuntsu  என்ற இனத்தவர்கள் 1000 பேரும் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகின் இயற்கை சொத்தான அமேசான் காடுகள் இன்று மக்களின் செயற்பாடுகள் காரணமாகவும், இயற்கையின் சீற்றம் காரணமாகவும் அழிக்கப்பட்டு வருகின்றது. இக்காடுகள் 90-140 பில்லியன் மெட்ரிக் தொன் காபனினை சேமித்து வைத்துள்ளது. அத்துடன் இக்காட்டினை மூலவளமாக கொண்டு 34 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இக்காடுகள் 2001-2012 ஆம் ஆண்டு வரை வருடாவருடம் 1.4 மில்லியன் ஹெக்டேயர் அழிக்கப்பட்டு வந்தது. இதில் குறிப்பாக பிரேசில், பேரு, பொலிவியா ஆகிய பகுதிகளில் 17.7 மில்லியன் ஹெக்டேயர் அழிக்கப்பட்டுள்ளன. இக்காடழிப்பானது 2030களில் 48 மில்லியன் ஹெக்டேயர் ஆக அழிக்கப்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் நாம் இவ் அளப்பரிய சொத்தினை பாதுகாப்போம்.

மண்ணரிப்பு (Soil Erosion)

மண்ணரிப்பு (Soil Erosion)
உலகளாவிய ரீதியில் இடம்பெறுகின்ற முக்கிய சூழல் பிரச்சனைகளில் ஒன்றாக மண்ணரிப்பு காணப்படுகின்றது. மண்ணரிப்பு என்பது நிலத்திலிருந்து மேல்மண் நீரினாலும் காற்றினாலும் அரித்து செல்லப்படுவதை குறித்து நிற்கும். இம் மண்ணரிப்பானது இற்றைக்கு 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னராகவே நடைபெற்று வருகின்றது மனிதனின் துரித செயற்பாடுகள் காரணமாக அண்மைக்காலங்களில் அதிகளவில் மண்ணரிப்பு ஏற்படுகின்றது. இம் மண்ணரிப்பு சமதரைகளிலும், சாய்வான பகுதிகளிலும் அதிகளவில் இடம்பெறும்.
உலகளாவிய ரீதியில் மண் தரமிழத்தல் இடம்பெறும் பிரதேசங்கள் 
1)மிக அதிகளவில் மண் தரமிழத்தல் இடம்பெறும் பகுதிகள்- மடகஸ்கார், தென் சீனா, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, கலிபோர்னியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மார், சில்லி 
2)ஓரளவு தரமிழந்த மண் காணப்படும் பகுதிகள்– அவுஸ்திரலியா, பிரேசில், கொங்கோ, ஆர்ஜென்டினா, போலந்து, மலேசியா, அமெரிக்கா, பங்களாதேஷ் 
3)நிலையான மண்- ரஷியா,  கனடா, ஜப்பான், கொரியா 
4)தாவர போர்வையற்ற மண்– கிரீன்லாந்து, சகேல் பகுதி 
மண்ணரிப்பினை தூண்டும் காரணிகள் 

1)அதிகளவிலான மழைவீழ்ச்சிகள் 
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் அதிகளவிலான மழை பொழிகின்ற சந்தர்ப்பத்தில் அதன் பருமன் நிலத்தில் விழும்போது மண்ணானது நீரோடு அடித்து செல்லப்படுகின்றது. இதனால் மண்ணரிப்பு ஏற்படுகின்றது. இது பங்களாதேஷ், சீனா, கலிபோர்னியா, மடகஸ்கார் ஆகிய நாடுகளில் அதிகளவில் காணலாம்.
2)வெள்ளப்பெருக்கு 
ஒரு பிரதேசத்தில் உள்ள நதிநீரின் கொள்வனவு அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அந்த நீரானது அயற்பகுதியிலுள்ள மன்னனையும் சேர்த்து எடுத்து கொண்டு செல்கின்றது. இதனால் மண்ணரிப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக சீனாவில் கொங்கொங் நதியானது 1600மில்லியன் தொன் மண்ணினை மஞ்சள் கடலுடன் எடுத்து செல்கின்றது. இதனால் 10மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மற்றும் அமெரிக்காவில் மிசூரி மிஸிஸிப்பி நதியினால் வருடாவருடம் 448 டன் பரல் மண் கடலோடு எடுத்து செல்லப்படுகின்றது.
3)கடல் அலையின் செயற்பாடு
கடற்கரையோரத்தில் அலைகளின் தொழிற்பாடு காரணமாக தின்னல் செயற்பாடு தீவிரப்படுத்தப்படும்போது கரையோரத்தில் உள்ள மண் அரித்தல் நிலைக்கு உட்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் தென்பகுதி கடற்கரையில் 685கிலோமீட்டர் பரப்பு கரையோரம் மண்ணரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது.
4)காற்று 
தாவரப்போர்வைகள் அருகியுள்ள பகுதிகளிலும் காற்றின் தீவிரதன்மை ஏற்படும் பகுதிகளிலும் காற்றின் தின்னல் செயற்பாடு காரணமாக மண்ணானது ஓர் இடத்தில இருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்து செல்லப்படுகின்றது. இதனால் அப்பகுதிகளில் அதிகளவு மண்ணரிப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக சகாரா, கோபி, அட்டகாமா, அரிசோனா, பற்றகோனியா ஆகிய பகுதிகளில் இவ்வாறான மண்ணரிப்பு நடைபெறுகின்றது.
5)காடழிப்பு 
அதிகரித்த சனத்தொகைக்கு ஏற்ப இன்று உலகில் காடழிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக மண்ணினை தாங்கி பிடிக்க கூடிய தன்மை இழக்கப்படுகின்றது. இவ்வாறு மரங்கள் இல்லாது போவதனால் மண்ணரிப்பு துரிதமாக இடம்பெறுகின்றது. குறிப்பாக 2008ம் ஆண்டுகளில் அமேசான் காடுகளில் 8% ஆனவை அழிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பிரேசில், ஆர்ஜென்டினா ஆகிய பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படுகின்றது. இந்தியாவில் ஆண்டுதோறும் 1.5 மில்லியன் தொன் காடுகள் அழிக்கப்படுவதனால் மண்ணரிப்பு ஏற்படுகின்றது.
6)உயர் பிரதேசங்களில் கட்டிடங்களினை அமைத்தல் 
மலைப்பாங்கான பகுதிகளில் இன்று மக்களின் தோட்ட குடியிருப்புக்கள் அமைக்கப்படுகின்றன, இதன்போது தாவரப்போர்வைகள் வெட்டி வெட்டி அகற்றப்படுகின்றன. இதன்காரணமாக சாய்வான பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படுகின்றன. இதனை இலங்கை, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அவதானிக்கலாம்.
7)அளவுக்கு அதிகமான மந்தை மேய்ச்சல் 
8)அகழ்வு நடவடிக்கைகள் 
9)பாதுகாப்பு அற்ற விவசாய முறைகள் 
 மண்ணரிப்பினால் ஏற்படும் விளைவுகள் 
1)விவசாய ரீதியான பாதிப்புகள் 
மண்ணரிப்பு ஏற்படுவதனால் மண்ணானது ஓர் இடத்தில இருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்து செல்லப்படுகின்றது. இதன்காரணமாக தாவரங்கள் திறம்பட வளர முடியாத சூழ்நிலை உருவாகின்றது. குறிப்பாக மண்ணரிப்பினால்  ஈரானில் 94% பாதிப்பும், பாகிஸ்தானில் 61% பாதிப்பும், இலங்கையில் 44% பாதிப்பும் விவசாயத்தில் ஏற்பட்டது.
2)மேல்மண் படை இழக்கப்படுதல் 
மண்ணரிப்பு துரிதமாக இடம்பெறுவதனால் மண்ணில் உள்ள மேல் மென் படையான Aபடை அடித்து செல்லப்படுகின்றது. இதனால் மண்வளம் குன்றுகின்றது. குறிப்பாக மடகஸ்காரில் வருடாந்தம் 400தொன் மேல்மண் படை அரிக்கப்படுகின்றது. பிரேசிலில் வருடாவருடம் 55மில்லியன் தொன் மேல்மண் படை அரிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 25000 மில்லியன் தொன் மேல்மண் படை பாதிக்கப்படுகின்ற்து.
3)மண்ணின் சேதன பொருட்களின் அளவு குறைவடைதல் 
மண்ணரிப்பு காரணமாக மேல்மண் படை தரமிழகப்படுவதோடு மட்டுமல்லாமல் நீரோடு அல்லது காற்றோடு அடித்து செல்லப்படுகின்றது. இதன்காரணமாக மண்ணில் உள்ள சேதன கூறுகளில் அளவு குறைந்து மண்வளம் குன்றியதாக மாறுகின்றது.
4)நீர்த்தேக்கங்களில் கனவளவு குறைவடைதல் 
ஆற்றுப்படுகைகளில் அதிகளவிலான மண்ணரிப்பு நிகழ்கின்றது. இதன்காரணமாக மண் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நீரின்முலம்  அரித்து செல்லப்படுகின்றது. இதனால் மண்ணின் அளவு குறைவதோடு மட்டுமில்லாது நீர்த்தேக்கங்களின் கனவளவும் குறைவடைகின்றமையினை அவதானிக்கலாம்.  
5)தரிசு நிலங்கள் உருவாகின்றது 
மண்ணரிப்பு ஏற்படுகின்ற பகுதிகளில் காற்றோடு அல்லது நீரோடு மேல்மண் படை அரித்து செல்லப்படுகின்றது. இதனால் மண்ணில் உள்ள சேதன கூறுகள் குறைவடைந்து செல்லும். இதன் காரணமாக மண் வளமற்றதாக மாறுவதோடு காலப்போக்கில் தரிசு நிலங்கள் உருவாகும்.
மண்ணரிப்பினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் 
1)மண்ணின் பாதுகாப்புக்கு அணைக்கட்டுகளினை அமைத்தல் 
2)புற்கள், மூடுபயிர்கள் போன்றனவற்றினை வளர்த்தல் 
3)மக்களிடையே மண்ணரிப்பு தொடர்பான விழிப்புணர்வுகளினை மேற்கொள்ளல் 
4)காடழிப்பினை தடை செய்தல் 
5)முறையான விவசாயத்தினை மேற்கொள்ளல் 
6)நிலமுகாமைத்துவ முறைகளினை கடைபிடித்தல் 
7)படிக்கட்டு விவசாய முறையை மேற்கொள்ளல் 
8)மந்தைகளினை சுழற்சி முறையில் நிலங்களில் மேயவிடுதல் 

நக்கிள்ஸ் வன ஒதுக்கு பிரதேசம் (Knuckles Forest Reserve)

நக்கிள்ஸ் வன ஒதுக்கு பிரதேசம் (Knuckles Forest Reserve)

இலங்கையிலுள்ள ஈரவலய காடுகளில் முக்கியமான காட்டுப்பிரதேசமாக நக்கிள்ஸ் வன ஒதுக்கு பகுதி காணப்படுகின்றது. இது மத்திய மாகாணத்தில் கண்டி , மாத்தளை ஆகிய மாவட்டங்களினை உள்ளடக்கி காணப்படுகின்றது. இதன் பரப்பளவு 160கிலோமீட்டர் / 17835 ஹெக்டேயர் ஆகும். அத்துடன் கடல் மட்டத்திலிருந்து 3500 அடியினை கொண்டு விளங்குகின்றது. இக்காடுகள் தேசிய வன பிரதேசமாகவும் தேசிய பொருளாதாரத்துக்கு பக்கபலமாகவும் காணப்படுகின்றன. இது நேரடியாகவும், மறைமுகமாகவும் நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது. 
நக்கிள்ஸ் காடுகள் 1873ம் ஆண்டு காடாக பிரகடனப்படுத்தப்பட்டது. 2000ம் ஆண்டு தேசிய மனித , உயிர்ப்பல்வகைமை  ஒதுக்கீடாக பிரகடனம் செய்யப்பட்டது. 2009ம் ஆண்டு UNESCO வினால்  உலக மரபுரிமை பட்டியலில் தெற்காசியாவில் முக்கியமான பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது. இக்காடுகளில் பலவகையான தாவரங்கள், விலங்குகள், ஊர்வன, பல்லாண்டு கால உயிரினங்கள், ஈரூடக வாழிகள், பறவைகள், முலையூட்டிகள், மீனினங்கள் போன்றன வாழ்கின்றன.
நக்கிள்ஸ் காடுகளில் உள்ள காலநிலை பற்றி அவதானிக்குமிடத்து இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலையானது குறைந்த வெப்பநிலை 19. செல்ஸியஸ் ஆகவும் அதிகரித்த வெப்பநிலை 31 செல்ஸியஸ் ஆகவும் காணப்படுகின்றது. வருடாந்த மழைவீழ்ச்சியினை பொறுத்தவரை தென்மேல் பருவக்காற்றின் மூலம் கிடைக்க பெறும் மழையினை தனதாக்கி கொள்கின்றது. இதன்போது காற்றின் வேகம் மணிக்கு 7.2 கிலோமீட்டர் ஆகவும் வளி ஈரப்பதன் 57%-90% ஆகவும் காணப்படுகின்றது. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 3000-5000 மில்லிமீட்டர் ஆகும்.
இங்கு விகடோரியா , ரந்தெனிகல ஆகியவற்றின் மூலம் 80% நீர்வளத்தினை கொண்டு காணப்படுகின்றன. அத்துடன் மகாவலிகங்கை, கென் ஆறு, மகா ஓயா, கஸ்லாகோ ஓயா, தெலிகமுவ, கொட கங்கை போன்ற ஆறுகள் சிறப்பு பெற்றவையாக விளங்குகின்றன.
மற்றும் இங்கு அதிகளவிலான மலை உச்சிகள் காணப்படுகின்றன. குறிப்பாக சிறிய உலக முடிவு என அழைக்கப்படும் இடமாக தென் நக்கிள்ஸ் காணப்படுகின்றது. இதன் உயரம் 1192மீட்டர் ஆகும். இதுதவிர 34 மலை உச்சிகள் காணப்படுகின்றன. இவை மனிதனின் கைப்பிடி போன்ற வடிவத்தினை பெற்றிருக்கும். இவற்றில் கொம்பரிய, கிரிகல்பொத்தானை, நக்கிள்ஸ், கோபனிக்கல, தொட்டகல ஆகியன முக்கியம் பெற்றவையாக காணப்படுகின்றன. இதுமட்டுமில்லாது இங்கு 20% சாவான புல்நிலங்கள், பத்தனை புல்நிலங்கள் காணப்படுகின்றது.
இவ்வாறான  நக்கிள்ஸ் வன ஒதுக்கு பிரதேசமானது முக்கியமான 44 பிரதேசங்களினை உள்ளடக்கி காணப்படுகின்றன. குறிப்பாக கமாடுவ, கரண்டமுல, இழுக்கும்புரா, பிடடவல, பொற்றவளை, புலக்பிட்டிய, டமண்டிணி, மகலகொட்டுவ, மேட எல, ரந்தினிடட, எடன்வல, கொணவல, வேலங்காவிடட, இக்கலவத்த, பல்லிகம, மினரங்கட்டிய, கல்மினிய, ரணமுரே. நரஙகமுவ, லக்கலை, குருவால, இமடுவை, கக்கலை, கண்கன்வலை, பம்பரகிரிகேலை, ரம்புக்வேல, நாக்கோல, பதகமபோல, சுழுக்குன, நுககொள, எல்கடுவ, குணஸ்கிரிவட்ட, செம்புவட்ட ஆகிய முக்கிய பிரதேசங்களை குறிப்பிடலாம்.
நக்கிள்ஸ் வன பகுதியிலுள்ள உயிர்ப்பல்வகைமை பற்றி அவதானிக்குமிடத்து 1033 தாவரவகைகளையும் 128 பறவை இனங்களையும் கொண்டுள்ளது பறவை இனங்களை அவதானிக்குமிடத்து 48 இனங்களும் 128 பறவைகளையும் கொண்டுள்ளது. பல்லாண்டு வாழும் பறவைகள் 17 உம், தேசிய பறவைகள் 20 உம் காணப்படுகின்றன. ஈரூடக வாழிகளினை அவதானிக்குமிடத்து 3 வகையான இனங்கள் காணப்படுகின்றன. அத்துடன் இதில் பல்லாண்டு காலம் வாழ்பவையாக 20ம் காணப்படுகின்றன. 78 வகையான வண்ணத்துப்பூச்சிகளும், 35 வகையான மீனினங்களும் காணப்படுகின்றன.
நக்கிள்ஸ் வன ஒதுக்கு பிரதேச மக்களின் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயமும், சுற்றுலாவும் காணப்படுகின்றது. இதில் 30-70% ஆன சாய்வு நில விவசாயம் விளங்குகின்றது. இங்கு தேயிலை, கறுவா, கராம்பு ஆகியன உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக 2700 ஹெக்டேயர் கறுவா தோட்டமும், மரத்தளபாட உற்பத்தி 1880 ஹெக்டேயர் பரப்பிலும் , தேயிலை 40% ஆன நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகின்றது. இதுதவிர சூழலியல்சார் சுற்றுலாவானது 35% ஆன இடத்தில் நடைபெறுகின்றது. இதற்கு சிறந்த இடங்களாக நக்கிள்ஸ் காடுகள் சரணாலயம்(19207 ஹெக்டேயர்). ஹோட்டன் சமவெளி(3109 ஹெக்டேயர்) போன்றன சிறந்து விளங்குகின்றன. இவற்றின் மூலம் அதிகளவிலான மக்கள் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர். குறிப்பாக அடன்வல பிரதேச மக்கள் 62% ஆன வேலைவாய்ப்பினையும், இழுக்கம்புர பிரதேச மக்கள் 60%ஆன வேலைவாய்ப்பினையும், பிட்டுவல பிரதேச மக்கள் 24% ஆன வேலைவாய்ப்பினையும் பெறுகின்றனர்.
இதுதவிர சுற்றுலா பயணிகள் மலைஏறுதல், காட்டினை சுற்றி பார்த்தல் போன்ற நடவடிக்கைகளினை மேற்கொள்கின்றனர். குறிப்பாக நக்கிள்ஸ் வனத்தின் நுழைவு பணமாக ஒருவருக்கு 575 ரூபாய் அறவிடப்படுகின்றது. அத்துடன் இங்கு சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு என அதிக விடுதிகள் காணப்படுகின்றன. குறிப்பாக Corbet view lodge, Rangala house, Amaya hunas falls, Green view holiday resort, Madulkella tea nd eco lodge, Sir John Bungalow, Mahawali reach hotel, Cinamon hotel, Clove villa, Manor house, Sevana city hotel போன்றன முக்கியம் பெற்றவையாக விளங்குகின்றன. இவை அனைத்தும் நக்கிள்ஸ் வன ஒதுக்கீட்டு பகுதியினை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சேனை பயிர்ச்செய்கை (World wide Chena Cultivation)

உலக சேனை பயிர்ச்செய்கை (World wide Chena Cultivation)

உலகிலே மிக பழமை வாய்ந்த பயிர்செய்கையாக சேனைப்பயிர்செய்கை காணப்படுகின்றது. இது ஆரம்பகாலங்களில் சுயதேவையினை நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பயிர்செய்கையாக மக்களினால் நம்பப்படுகின்றது. குறிப்பாக காடுகளினை எரித்து அதில் வருகின்ற சாம்பலினை கொண்டு நிலத்தினை பண்படுத்தி மேற்கொள்கின்ற பயிர்செய்கையாக சேனைப்பயிர் விளங்குகின்றது.
இலங்கையினை பொறுத்தவரை 5000ஆண்டுகளுக்கு முன்னர் சேனைப்பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் அனுராதபுரம், மொனராகலை, மஹியங்கனை, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் சேனை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. சேனை பயிர்செய்கையை சிங்கள மொழியில் “கிலி” என அழைத்து கொள்ளுவார்கள். உலகளாவிய ரீதியில் சேனைப்பயிர் செய்கையானது பரந்துபட்ட அளவில் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக மத்திய அமெரிக்காவில் மெக்சிகோவிலும், தென் அமெரிக்காவில்  அமேசான் பகுதி, பிரேசில், உருகுவே ஆகிய பகுதிகளிலும் மத்திய அமெரிக்காவில் கொங்கோ, சாட், நைஜீரியா, கென்யா, அங்கோலா ஆகிய இடங்களிலும் ஆசியாவில் இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலாயா  பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றது.
உலகில் சேனைப்பயிருக்கு வழங்கப்படும் பெயர்கள் 
1) அமேரிக்கா, ஆபிரிக்கா- மில்பா 
2)கிழக்கிந்திய தீவுகள்- லாடாங் 
3)பிலிப்பைன்ஸ்- டௌங்கியா 
4)இலங்கை- சேனைப்பயிர்செய்கை
சேனைபயிர் செய்கையின் முக்கிய அம்சங்கள் 
1)ஆரம்ப காலங்களில் சுயதேவைக்காக பயிரிடப்படுகின்ற பயிராக  சேனை பயிர் நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
2)காலத்துக்கு காலம் இடமாற்றம் செய்து பயிரிடப்படும் பயிர்செய்கையாகும். ஏனெனில் ஒரே இடத்தில இப்பயிர் செய்கையினை மேற்கொள்ளும் பொருட்டு நிலத்தின் வளம் குன்றுகின்ற நிலை ஏற்படும்.
3)காடுகளினை அழித்து சாம்பலினை பயன்படுத்தி மண்ணினை பண்படுத்தி மேற்கொள்கின்ற பயிர்செய்கையாக இது காணப்படுகின்றது.
4)மழையினை ஆதாரமாக கொண்டு மேற்கொள்கின்ற பயிர் செய்கையாகும். இலங்கையில் வடகீழ் பருவக்காற்று மழையினை நம்பி சேனைப்பயிர் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
5)சேனை பயிர்ச்செய்கை அறுவடையின்போது பெறப்படும் வெளியீடுகள் அதிகளவில் நுகர்வுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
6)சேனைப்பயிர்செய்கையில் மிளகாய், எள்ளு, கத்தரி, பூசணி, வெங்காயம், குரக்கன், சோயா, அவரை, பயறு, மரவள்ளி, மரக்கறிகள் ஆகியன பயிரிடப்படுகின்றன.
7)சேனை பயிர்செய்கையானது இலங்கையில் 4 வகை முறையில் நடைபெறுகின்றது. அவையாவன Nuvadali hena, Ath danguwa hena, Mukulan hena, Hen kanaththa ஆகியன ஆகும்.
சேனை பயிர்செய்கையில் நவீனத்துவம்.
1)சேனைப்பயிர்செய்கைகளில் ஆரம்பகாலத்தில் மண்வெட்டி, கத்தி கொண்டும் மாடுகளினை கொண்டு உழுதும் பயிரினை நாட்டினார். ஆனால் இன்றயை காலத்தில் உழவுஇயந்திரங்களின் மூலம் உழுது பயிர்செய்கையினை மேற்கொள்கின்றார்கள்.
2)ஆரம்பகாலத்தில் இயற்கை பசளைகளினை கொண்டு அவற்றினை பயன்படுத்தி பயிர்செய்கையினை மேற்கொண்டனர். ஆனால் இன்று கிருமிநாசினிகள், களைகொல்லிகள் போன்றவற்றினை உபயோகித்து பயிரினை வளர்ச்சி அடைய செய்கின்றனர்.
3)ஆரம்பகாலங்களில் மழையினை மட்டும் ஆதாரமாக கொண்ட பயிர்செய்கையாக காணப்பட்டது. ஆனால் இன்று நீர்பாசனத்தையும் அதனது தொழிநுட்பத்தினையும் பிரயோகித்து மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக குழாய்கிணறுகள், செயற்கை நீர்த்தேக்கங்கள் அமைத்தல் போன்ற முறைகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
4)சேனை பயிர்செய்கைகள் ஆரம்பகாலங்களில் குடும்ப அங்கத்தவர்களினால் மேற்கொள்ளப்பட்டது. இன்று தொழிலாளர்களினை அதிகளவில் உள்ளடக்கி பரந்துபட்ட அளவில் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் இன்று மக்கள் வேலைவாய்ப்பினை ஈட்டிக்கொள்கின்றனர்.
5)சேனை பயிர்செய்கையினை ஆரம்ப காலத்தில் சுயதேவைக்காக மட்டும் மக்கள் மேற்கொண்டனர். ஆனால் இன்று நுகர்வுக்காக மட்டுமன்றி வர்த்தக நோக்குடனும் மேற்கொள்வதினை அவதானிக்கலாம். குறிப்பாக பழங்கள், மரக்கறி வகைகள், தானியங்கள், ஆகியன வர்த்தக நோக்கம் கருதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனை பிலிப்பைன்ஸ், மடகஸ்கார், கலிபோர்னியா, இலங்கை, பிரேசில், ஆகிய நாடுகளில் அவதானிக்கலாம்.
6)சேனைப்பயிர்செய்கையில் ஆரம்பத்தில் மண்ணினை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் இன்று சில நாடுகளில் மண் இன்றிய குழாய் மூலமான பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இதனை பிலிப்பைன்ஸ், மெஸ்சிக்கோ ஆகிய நாடுகளில் அவதானிக்கலாம்.
சேனைபயிர் செய்கை மேற்கொள்வதினால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் 
1)மண்ணரிப்பு ஏற்படும் 
குறிப்பாக சேனைப்பயிர் செய்கையினை குறித்த ஒரு இடத்தில் மேற்கொள்கின்றபோது காலஓட்டத்தில் அப்பகுதி மண்ணானது அரித்தல் செயற்பாட்டுக்கு உட்படுகின்றது. மடகஸ்காரில் 80% மண்ணரிப்பு பயிர்செய்கை மேற்கொள்வதினால் நிகழ்கின்றது. வருடாவருடம் ஒரு கெக்டேயருக்கு 400டொன் மண்ணானது  அரிக்கப்பட்டு வருகின்றது. மெஸ்சிக்கோவில் வருடாவருடம் 5-7 மில்லியன் ஹெக்டேயர் நிலமானது மணரிப்பினால் பாதிக்கப்படுகின்றது.
2)மண்வளம் குன்றும் 
சேனைப்பயிர் செய்கை மேற்கொள்ளும் பகுதியில் அதிக காலமாக ஒரு இடத்தில் மேற்கொள்வதால் மண்ணின் வளமானது குன்றுவதோடு மட்டுமல்லாது மேல்மண் படையானது பாதிக்கப்டுகின்றது. குறிப்பாக 1980ம் ஆண்டுகளில்  இந்தோனேசியாவில் யாவா தீவில் ஒவ்வொரு வருடமும் 770 மில்லியன் டொன் மேற்படை மண் பாதிக்கப்படுகின்றது. மற்றும் மெக்சிகோவில் ஒவ்வொரு வருடமும் 25000மில்லியன் டொன் மேல்படை மண் பாதிக்கப்படுகின்றது., பிரேசிலில் வருடாவருடம் 55மில்லியன் டொன் மேல்மண் படை  பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
3)இயற்கை தாவரங்கள் அழிப்பு 
சேனைப்பயிர் செய்கையானது காடுகளினை அழித்து மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் தாவரங்களில் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக இந்தோனேசியா, பிரேசில், கொங்கோ, மடகஸ்கார் ஆகிய பகுதிகளில் காடுகள் அதிகளவில் அழிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
4)வரட்சி ஏற்படும் 
காடுகளினை அழிக்கும் பொருட்டு காபனீரொடசைட்டு இன் செறிவு அதிகரிப்பதனால் பூகோளப்பரப்பிலே வெப்பநிலையானது சடுதியாக அதிகரிக்கின்றது. இதன் காரணமாக வரட்சி நிலை ஏற்படுகின்றது. இவ் வரட்சியினால் மண் வெடித்து காற்றோடு எடுத்து செல்லப்படுகின்றது.
5)இயற்கை சமநிலை பாதிக்கப்படும்.
6)உயிர் பல்வகைமை அழிவடைகின்ற நிலை ஏற்படும்.
7)காலநிலையில் மாற்றம் ஏற்படும்.

இலங்கை தீவின் புவியியல் இரகசியங்கள்(The Secret of SriLanka Island Geography)

இலங்கை தீவின் புவியியல் இரகசியங்கள் (The Secret of srilankan Island Geography)

 

இந்துசமுத்திர பரப்பிலே இந்திய துணைக்கண்டத்தில் மிக அழகாக ஆசியாவின் ஆச்சரியம் மிக்க தீவாக இலங்கைத்தீவு விளங்குகின்றது. இலங்கை இந்தியாவுக்கு தென்கிழக்கே அமைந்திருப்பதோடு 32கிலோமீட்டர் நீளமான பாக்குநீரிணை இவ்விரு நாடுகளினையும் பிரிகின்றது. இவ் இலங்கைத்தீவு மத்திய கோட்டிற்கு வடக்கேயும் வடஅகலாங்கு 5-10., கிழக்கு நெட்டாங்கு 79-81 பாகைக்கும் இடையில் அமைந்துள்ளது. அத்துடன் வடக்கே பருத்தித்துறை முனையில் இருந்து தெற்கே தெவிநுவர வரை 432கிலோமீட்டர் நீளத்தினையும் கிழக்கே சங்கமன்கந்தமுனை தொடக்கம் மேற்கே கொழும்பு வாராய் 224 கிலோமீட்டர் அகலத்தினையும் உள்ளடக்கி 65610சதுர கிலோமீட்டர் பரப்பளவினை கொண்டு காணப்படுகின்றது. இதன் கரையோர நீளம் 1340 கிலோமீட்டர் ஆகும். அதிகூடிய உயரம் 2524.19 மீட்டர் ஆகும். இது பீதுருதாலகால மலையினை குறித்து நிற்கின்றது.
இவ் இலங்கையானது ஆரம்பக்காலந்தொட்டு பல்வேறு நாட்டவர்களினால் ஆளப்பட்டு வந்த தீவாகும். இதனால் பல வகையான பெயர்களுக்கு சொந்தக்காரனாக இலங்கை காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கை, செரண்டிப், சிலோன், இலங்காபுரி, லங்காத்தூபி, தம்பபன்னி, மணிபல்லவம் ஆகிய பெயர்களினால் அழைக்கப்பட்டது. இலங்கையின் தரைத்தோற்ற அம்சங்களினை அவதானிக்குமிடத்து கரையோர சமவெளி(0-30மீட்டர்), அண்சமவெளி அல்லது ஆறு அரித்த சமவெளி(30-300மீட்டர்), மத்தியமலை நாடு(300மீட்டர் க்கு மேல்) ஆகியன காணப்படுகின்றது.
கரையோர சமவெளியினை பார்க்குமிடத்து பல்லுருவ கடற்கரைகள், தீவுகள், குடாக்கள், முனைகள், மணத்தடைகள்,கடனீரேரிகள், குடாநாடு, கழிமுகங்கள்(45), களப்புகள்(40), பவளப்பாறைகள் ஆகியவற்றினை கொண்டுள்ளது. அக சமவெளியினை அவதானிக்குமிடத்து எச்ச குன்றுகள்(மொனாட்நொக்ஸ்) காணப்படுகின்றது. மத்திய மலை நாட்டில் மலைகள், நீர்வீழ்ச்சிகள், கணவாய்கள், ஆறுகள், மேட்டு நிலங்கள் ஆகியவற்றினை உள்ளடக்கி காணப்படுகின்றது.
இலங்கைதீவின் காலநிலை தன்மைகளினை எடுத்துரைக்கும்போது வெப்பநிலையானது சராசரியாக 28 செல்ஸியஸ் இனையும், குறைந்த வெப்பநிலை 17செல்ஸியஸ் ஆகவும், அதிகூடிய வெப்பநிலை 33செல்ஸியஸ் ஆகவும் காணப்படுகின்றது. மழைவீழ்ச்சி பற்றி அவதானிக்குமிடத்து வடகீழ் பருவக்காற்று(டிசம்பர்-பெப்ரவரி), தென்மேல் பருவக்காற்று(மே-செப்டெம்பர்), சூறாவளிமழை(அக்டோபர்-நவம்பர்) ஆகியவற்றின் மூலம் மழைவீழ்ச்சியினை பெற்று கொள்கின்றது. இலங்கையின் சராசரி மழைவீழ்ச்சி ஈரவலயத்தில் 2000 மில்லிமீட்டர் ஆகும், உலர் வலயத்தில் 1250-2000மில்லிமீட்டர் ஆகும், அரைகுறை வறள் வலயத்தில் 1250மில்லிமீட்டர் க்கும் குறைவாக காணப்படுகின்றது.
இலங்கை தீவின் முக்கிய புவியியல் அம்சமாக மண் அமைப்பு காணப்படுகின்றது. இலைகையினை பொறுத்தவரை பலவகையான மண்வகை உண்டு. குறிப்பாக செங்கபில நிறமண்,கல்சியமற்ற கபிலநிற மண், கால்சியமுள்ள செம்மஞ்சள் ல்ட்டசோல் மண், சொலலைட்  மண், வண்டல் மண், செம்பூரான் ஈரகளிமண், செங்கபில ஈரகளிமண், கல்சிய செம்மண்ணும் நரை மண்ணும், அண்மைக்கால மண் ஆகியன காணப்படுகின்றது.
இலங்கையின் முக்கிய உணவு பயிர்களாக நெல்லரிசி, குரக்கன், சோளம், பயறு, கௌபி, சோயா, அவரை, துவரம்பருப்பு, கடலை, உருளைக்கிழங்கு, மரவள்ளி, வற்றாளை, சிகைக்கிழங்கு, நிலக்கடலை, கடுகு, மரக்கறி, பழவகை, எள், முந்திரி, வெங்காயம், கறிமிளகாய், வெந்தயம் ஆகியன அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இதுதவிர பிரதான பெருந்தோட்ட பயிர்களாக தேயிலை, இறப்பர், தெங்கு ஆகியன காணப்படுகின்றது. அத்துடன் தேயிலை, இறப்பர், வாசனை திரவியங்கள், தெங்கு, பூக்கள், வெற்றிலை, புகையிலை ஆகியன ஏற்றுமதி பொருட்களாக விளங்குகின்றன.
இலங்கையின் கரையோர நிலவுருவங்களில் முக்கியமாக தீவுகள் காணப்படுகின்றன. ஏனைய நாடுகளோடு ஒப்பிடுமிடத்து சிறப்பான  இயற்கை அம்சங்களினை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றுள் முக்கிய தீவுகளாக அனலைதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, குறிகாட்டுவான், எழுவைதீவு, காரைதீவு, எருமைத்தீவு, சல்லித்தீவு, தேத்தாத்தீவு, மகிழடித்தீவு, கச்சத்தீவு, காக்கைதீவு, யானைத்தீவு, இரணைதீவு, ஹெனாதீவு, கரடித்தீவு, வேலணை, மண்டைதீவு, கனந்தீவு, நடுத்துரைத்தீவு, பாலைதீவு, வவுணதீவு, திமிலதீவு, புளியந்தீவு, மன்னார்தீவு, புறாத்தீவு, பெரியதீவு, பரட்டித்தீவு, இப்பந்தீவு, பெரியக்கன்கெனித்தீவு, ஓடக்காரன்தீவு ஆகியன முக்கியம் பெற்றவையாக காணப்படுகின்றன.
இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் அழகினை சேர்பவையாக ஆறுகள் காணப்படுகின்றன. குறிப்பாக இங்கு 103 ஆறுகள் காணப்படுகின்றன. அதிக நீளமான ஆறாக மகாவலிகங்கை(335கிலோமீட்டர்) காணப்படுகின்றது. இதுதவிர மாணிக்கங்கை. தெதுறுஓயா, களணிக்கங்கை, கும்புக்கன் ஓயா, கலாஓயா, கல்லோயா, வளவைகங்கை, நிலவள கங்கை ஆகியன முக்கியம் பெற்றவையாக காணப்படுகின்றன. இதுதவிர நீர்வீழ்ச்சிகளினை கூறுமிடத்து மிகவும் உயரமான நீர்வீழ்ச்சியாக பம்பரகந்த(263மீட்டர்) காணப்படுகின்றது. 10மீட்டர் க்கும் அதிகமான நீர்வீழ்ச்சிகள் 51 காணப்படுகின்றது. இலங்கையில் முக்கிய நீர்வீழ்ச்சியாக பம்பரகந்த, லக்சபான, தியலும, துன்கிந்தை, ரம்பொட, அபர்டீன், டெவோன், எல்ஜின் ஆகியன காணப்படுகின்றது.
ஆசியாவில் சுற்றுலாவுக்கு சிறந்த இடமாக இலங்கை காணப்படுகின்றது. இதில் அதிக பயணிகள் பொழுதுகளினை கழிக்கும் இடமாக கடற்கரை காணப்படுகின்றது. இவற்றுள் முக்கிய கடற்கரைகளாக அம்பலாங்கொட கடற்கரை(காலி), அறுகம்குடா(அம்பாறை), மட்டக்களப்பு, பெந்தோட்ட கடற்கரை(காலி), கல்பிட்டிய(புத்தளம்), பேருவளை கடற்கரை(களுத்துறை), காலி, ஹிக்கடுவை கடற்கரை(காலி), யாழ்ப்பாண கடற்கரை, கற்குடா மற்றும் பாசிக்குடா(மட்டக்களப்பு), கொக்கல கடற்கரை(காலி), மன்னார் தீவு, மிரிஷ கடற்கரை(மாத்தறை), கல்கிசை கடற்கரை(கொழும்பு), நீர்கொழும்பு கடற்கரை(கம்பஹா), நிலாவெளி கடற்கரை(திருகோணமலை), தங்காலை கடற்கரை(அம்பாந்தோட்டை), உணவந்துன கடற்கரை(காலி) ஆகியன காணப்படுகின்றன.
இலங்கையின் முக்கிய பொருளாதாரத்தில் மீன்பிடி முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இதற்கு தேவையான ஒரு கரையோர அம்சமாக கடனீரேரி விளங்குகின்றது. அவற்றில் முக்கியம் பெற்றவையாக யாழ்ப்பாண கடனீரேரி, மட்டக்களப்பு கடனீரேரி, சாலை கடனீரேரி, சுண்டிக்குளம் கடனீரேரி, நாயாறு கடனீரேரி, புத்தள கடனீரேரி, வடமராட்சி  கடனீரேரி, கொக்கிளாய் கடனீரேரி, கொக்கல கடனீரேரி, முந்தன் கடனீரேரி, நந்தி கடனீரேரி, ராக்வெவ கடனீரேரி, உப்பாறு கடனீரேரி, வாழைச்சேனை கடனீரேரி ஆகியன சிறந்து விளங்குகின்றது.
மத்திய மலைநாட்டில் முக்கியம் பெற்ற இயற்கை அம்சங்களாக மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. இவற்றில் உயரமான மலையாக பீதுறுதாலகால மலை(2524மீட்டர்) காணப்படுகின்றது. இதுதவிர சிவனொளிபாத மலை, அப்புத்தளை மலை, கிரிகால பொத்த, லுணுகல, நமுனுகுலகந்த, நக்கிள்ஸ் ஆகியன முக்கியமான மலைத்தொடர்களாகும். இதுதவிர பிரதான மேட்டுநிலங்களாக கண்டி, அடடன், வெலிமட, நுவரெலியா, சீதாஎலியா, ஹட்டன், கொஸ்லந்தை, மகாவலதன ஆகியன விளங்குகின்றன. மற்றும் பிரதான கணவாய்களாக கலகதெர (குருநாகல்-கண்டி), பலன(கொழும்பு-கண்டி), கினிகேல்தென (அவிசாவளை-நுவரெலியா), பலக்கடுவ(மாத்தளை-கண்டி), அப்புத்தளை(பலாங்கொடை-பண்டாரவளை), எல்ல(வெல்லயா-பதுளை) ஆகியன குறிப்பிடத்தக்கன.
மேற்கூறபட்டவாறு இலங்கைத்தீவின் புவியியல் இரகசியங்கள் விளங்குகின்றது. இவ் அழகிய தீவானது உலகின் கவனத்தினை தன்னகத்தே கொண்டு இந்து சமுத்திரத்தின் முத்தாக திகழ்கின்றது.
இது தொடர்பான மேலதிக தகவல்களினை நீங்கள் கீழ்வரும் காணொளியில் காணலாம்.